ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஒவ்வொரு துறைக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 32 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை: தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழக மேலாண் இயக்குநராக இருந்த டாக்டர் டி.ஜி. வினய், IAS, தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு பி. பொன்னையா, IAS, உயர்கல்வித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ஆர். அழகுமீனா, IAS, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆட்சியர்கள்
இந்த அரசாணையின்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான முக்கிய மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு பி. ஆகாஷ், IAS, மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் : மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த திரு கே.ஜே. பிரவீன் குமார், IAS, நாகப்பட்டினம் மாவட்ட புதிய ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: நிதித்துறையின் இணைச் செயலாளராக இருந்த திரு பிரதீக் தயாள், IAS, திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்: உயர்கல்வித் துறையின் துணைச் செயலாளராக இருந்த திருமதி ஆர். ரேவதி, IAS, தஞ்சாவூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு எம். பிரதாப், IAS, கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை: விடுப்பிலிருந்து திரும்பிய திருமதி வந்தனா கார்க், IAS, திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி: கூடுதல் ஆட்சியராக (மேம்பாடு) இருந்த திருமதி ஜே.இ. பத்மஜா, IAS, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம்: சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளராக இருந்த திரு சிம்ரன்ஜீத் சிங் காலோன், IAS, இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்: தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்த திருமதி வி.ஆர். சுப்புலட்சுமி, IAS, வேலூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக இருந்த திரு ஆனந்த் மோகன், IAS, திருநெல்வேலி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல்: திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த திரு எல். மதுபாலன், IAS, நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி: செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக இருந்த டாக்டர் ஆர். வைதிநாதன், IAS, தேனி மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications