பாலியல் புகார்.. மெயிலில் குமுறிய பெண்கள்.. பிரபல இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா நீக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். காவல்துறை உயரதிகாரிகளே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல இளம் நிர்வாகி மதூர் சத்யா மீது பல்வேறு பெண்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் கூறினார்கள். அதனடிப்படையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. (Mathur Sathya)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூகவலைதளங்களிலும் தன்னுடைய கருத்துகளால் பிரபலமடைந்தவர். ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்ச்சிகள், யூடியூப் நேர்காணல்களில் அரசியல் குறித்து பேசுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

மதூர் சத்யா மீது பாலியல் புகார்
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே சிவா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதூர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாலை இ மெயில் மூலம் மதூர் சத்யா மீது பாலியல் புகார் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
கட்சியில் இருந்து நீக்கம்
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மதூர் சத்யாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF தோழர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மதுர் சத்யா பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் அவர் மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு விளக்கம்
இதுகுறித்து மதுர் சத்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் உறவை தொடர்ந்துள்ளேன்.
நான் மௌனமாக இருப்பதால் என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடாது. இந்த நிலையில் நான் அப்பாவி என்று நீங்கள் நம்புவது கடினமாக இருக்கும். இனி நான் என்ன சொன்னாலும் அது எனக்கு உதவ போவதில்லை. என்னை நம்பிய கட்சிக்கும், தோழர்களுக்கும் சட்டரீதியாக நிரூபிப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications