பாலியல் புகார்.. மெயிலில் குமுறிய பெண்கள்.. பிரபல இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா நீக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். காவல்துறை உயரதிகாரிகளே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல இளம் நிர்வாகி மதூர் சத்யா மீது பல்வேறு பெண்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் கூறினார்கள். அதனடிப்படையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. (Mathur Sathya)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூகவலைதளங்களிலும் தன்னுடைய கருத்துகளால் பிரபலமடைந்தவர். ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்ச்சிகள், யூடியூப் நேர்காணல்களில் அரசியல் குறித்து பேசுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

மதூர் சத்யா மீது பாலியல் புகார்
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே சிவா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதூர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாலை இ மெயில் மூலம் மதூர் சத்யா மீது பாலியல் புகார் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
கட்சியில் இருந்து நீக்கம்
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மதூர் சத்யாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF தோழர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மதுர் சத்யா பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் அவர் மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு விளக்கம்
இதுகுறித்து மதுர் சத்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் உறவை தொடர்ந்துள்ளேன்.
நான் மௌனமாக இருப்பதால் என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடாது. இந்த நிலையில் நான் அப்பாவி என்று நீங்கள் நம்புவது கடினமாக இருக்கும். இனி நான் என்ன சொன்னாலும் அது எனக்கு உதவ போவதில்லை. என்னை நம்பிய கட்சிக்கும், தோழர்களுக்கும் சட்டரீதியாக நிரூபிப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications