அதெப்படி நாம் தமிழர் மீது NIA விசாரணை நடத்தலாம்? சப்போர்ட்டுக்கு வரும் மே17 திருமுருகன் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனைகள், விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA- என்.ஐ.ஏ) நடவடிக்கைக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நிதி உதவி பெற்றது, தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

May 17 Movement opposes NIA Probe against Naam Tamilar Party


நாம் தமிழர் கட்சியினர் மீதான இந்த விசாரணைக்கு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார். என்.ஐ.ஏ. விசாரணை நடத்துவதாக இருந்தால் என்னைதானே முதலில் விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சிக்கு தற்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளாதாவது: நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மீது என்.ஐ.ஏ விசாரணை என்பது கண்டனத்திற்குரியது. மாநில கட்சிகளின் மீதான நெருக்கடிகளை பாஜக அதிகரித்துக்கொண்ட வண்ணம் இருக்கிறது. அமலாக்கத்துறை, தேசியபுலனாய்வு முகமை எனும் நிறுவனங்கள் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கைப்பாவையாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளின் நோக்கம் ஊழலை ஒழிப்பதோ, தேசத்தை பாதுகாப்பதோ அல்ல, மாறாக பாஜகவின் நலனுக்காக செயல்படுவதாகவே அமைவதாக இந்தியாவின் பல முன்னனி தலைவர்களே அம்பலப்படுத்தியிருக்கின்றனர். மாநிலங்களின் கட்சிகள் முடங்கும் வண்ணம் செயல்படும் போக்கானது கண்டனத்திற்குரியது.

மாநில கட்சிகளிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் அணுகுமுறைகள் மாறுபட்டு இருந்தாலும் பாஜக எனும் பெரும் ஆபத்தை அனைவரும் எதிர்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இக்கட்சிகள் உணரவேண்டும். தமக்குள்ளாக பிரிந்து எதிரிக்கு வழிவிடும் போக்கை ஆங்கிலேயர் காலம் முதல் இன்றுவரை தொடர்வது துயரமானது. நமக்குள்ளாக இருக்கும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் உரிமை காக்க ஒற்றுமையுணர்வுடன் பாஜக தமிழ்நாட்டில் காலூன்றச்செய்யாமல் இயங்க வேண்டுமென்பதை இந்நிகழ்வு மேலும் உறுதி செய்கிறது. மாநில காவல்துறையின் அதிகாரத்தை மீறி செயல்படும் என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் மாநில உரிமையை சிதைக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டு நாம் தமிழர் மீதான விசாரணையை அனைவரும் கண்டிக்க முன்வரவேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+