துப்பாக்கி குண்டுகளுடன் விமானம் ஏற முயன்ற மயூரா ஜெயக்குமார்.. பையை மாற்றி எடுத்துவந்ததாக விளக்கம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் துப்பாக்கி குண்டுகளை விமான நிலையத்திற்கு எடுத்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் மயூரா ஜெயக்குமார். இவர் மயூரா ரேடியோ மார்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருகிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக இருக்கும் இவருக்கு தென் மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எப்போதும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் கோடி முனைகளில் கட்சிப் பணிகள் காரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் மயூரா ஜெயக்குமார்.
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது பைக்குள் 17 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவைகள் அனைத்தும் 7.5 Mm பிஸ்டன் ரக துப்பாக்கி குண்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமானம் ஏற அனுமதி மறுத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மயூராவிடம் விசாரணை நடத்தினர்.
பாஜக வெற்றி கண்டு பதறிய ஸ்டாலின்.. 3வது அணிக்கு அடிபோடும் காங்கிரஸ்.. உடைகிறதா கூட்டணி?
அப்போது தன்னிடம் உள்ள துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்கு முறைப்படி அனுமதி பெற்றிருப்பதாகவும், உரிமம் கூட வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மயூரா ஜெயக்குமார். துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த பையை மாற்றி எடுத்து வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.