"வருங்கால முதல்வர்” கோஷம்.. உடனே கண்டித்த வைகோ! “நாங்கள் வாக்கு வங்கி கட்சி அல்ல” மேடையிலேயே பேச்சு
சென்னை: மதிமுக தொண்டர்கள் வைகோ வரும்போது 'வருங்கால முதல்வர்' கோஷமிட்டதை வைகோ கண்டித்துள்ளார். மேலும் "நாங்கள் பெரிய வாக்கு வங்கியை பின்னணியாகக் கொண்ட கட்சி என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், எந்தக் காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கியதும் இல்லை" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மதிமுக பேரூர் செயலாளர் கருணாநிதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மணமக்களை வாழ்த்திப் பேசினார். வைகோ மேடைக்கு வந்தபோது, உற்சாகமடைந்த தொண்டர் ஒருவர், "வருங்கால முதலமைச்சரே வாழ்க!" என உரக்க முழக்கமிட்டார். இதைக் கேட்ட வைகோ, உடனடியாக கண்டித்தார்.

வைகோ பேசும்போது, "நான் திருமண மண்டபத்திற்குள் நுழையும்போது ஒருவர் 'வருங்கால முதல்வர்' என முழக்கமிட்டார். இது எனக்குத் தேவையில்லாத ஒன்று. கட்சி தொடங்கிய காலத்திலேயே இத்தகைய கோஷங்களை நான் தடுத்து நிறுத்திவிட்டேன். இப்போதும் சொல்கிறேன், எங்களுக்கு அத்தகைய ஆசை ஏதுமில்லை.
மதிமுக ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சி என்று நான் என்றுமே தம்பட்டம் அடித்ததில்லை. அதேபோல், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் அரசியல் செய்யவில்லை. லட்சியங்களுக்காகவும், மக்களுக்காகவும் மட்டுமே எங்களது பயணம் தொடர்கிறது" எனத் தெரிவித்தார்.
சமீபகாலமாக தமிழக அரசியலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரல் விவாதம் ஆகி வருகிறது. இது குறித்துச் செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர். "திமுக கூட்டணியில் நீடிக்கும் நீங்கள், ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?" எனப் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்காத வைகோ, சட்டென தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
-
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications