நலிந்த மக்களுக்கு உதவுங்க! இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி மகிழுங்கள்.. வைகோ பொங்கல் வாழ்த்து
சென்னை: ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள் என்று வைகோ பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழர் திருநாள்.. திராவிடர் திருநாள்.. பொங்கல் திருநாள் என்றெல்லாம் தமிழ் மக்களால் விழா எடுத்துக் கொண்டாடப்படுகிற உழவர் திருநாள் தமிழ் மக்களின் தொன்மையான விழாவாகும். உழவு செழிக்க துணை நிற்கும் கதிரவனுக்கும், பாடுபடும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா, வேளாண் திருவிழாவாக தமிழ் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு திராவிட இயக்கமே முதன்மையான காரணமாகும். தலைநகர் சென்னையிலும், தென்தமிழ்நாட்டிலும் பெருமழை - வெள்ளம் காரணமாக நம் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இழப்புக்கள் ஏராளம்! ஏராளம்!!
தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி துயர் துடைப்பு பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டார்கள். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கண்ணீர் சிந்திய மக்களுக்கு பல வகையிலும் உதவினார்கள். அவர்களின் விழி நீரைத் துடைத்திட மனிதநேயத்துடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட நல் உள்ளங்களை இவ்வேளையில் பாராட்டுகிறேன்.
ஆண்டுதோறும் ஊர்த் திருவிழாவாக உவப்புடன் கொண்டாடப்படும் கலிங்கப்பட்டி தமிழர் திருநாள் விழாவை இதன் காரணமாகவே நிறுத்தி வைத்துவிட்டோம். ஆனாலும் கூட, தமிழரின் பண்பாட்டுப் பெருமைமிகு அல்லவா இந்தப் பொங்கல் விழா! அந்த விழாவை வழமை போல விழா எடுத்துக் கொண்டாடி மகிழுங்கள். ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள்.
பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன்மாதிரி மாநிலமாக நமது தமிழ்நாடு வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சி அரசின் நீட்சியாக திராவிட மாடல் அரசினை மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடத்தி அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
பொங்கல் விழாவினைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அறைகூவி அழைக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் உயிர்நிகர் இலட்சியங்களான மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம், சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக நெறிமுறைகள் ஆகியவைகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து வரும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பா.ஜ.க. தன் ஆட்சியைத் தக்கவைக்க மீண்டும் களத்தில் நிற்கிறது.
திராவிட மாடல் ஆட்சியினை திறம்பட நடத்தி வரும் திமுகழகத்துடன் இந்தியா கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்திற்காக நாடு தழுவிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் பொங்கல் விழாவினை நாம் கொண்டாட இருக்கிறோம். பொங்கலோ பொங்கல் என்று கூவி மகிழ்ந்திடும் அதே வேளையில், ஆட்சி மாற்றத்திற்காகவும், நாம் சூளுரைப்போம்!.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications