பீரியட்ஸ் பெயின் முதல் மூட்டு வலி வரை! மெஃப்டால் 500 மாத்திரையை பயன்படுத்தாதீங்க! எச்சரிக்கை!
சென்னை: மெஃப்தால் மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என மருந்தியல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மெஃப்தால் 500 என்பது வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, தலைவலி, தசை பிடிப்பு, மூட்டு வலி, பல் வலி உள்ளிட்ட வலிகளை போக்குவதற்காக போடப்படுகிறது. இந்த மருந்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே மருந்து கடைகளில் வாங்கலாம்.

மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் வலி என்றாலே இந்த மெஃப்தால் மாத்திரையைதான் மருந்து கடைகளில் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மருந்தை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாத்திரை டைசைக்ளோமைன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும். இதன் மூலம் DRESS சிண்ட்ரோம் போன்ற கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தூண்டுகிறது. உடலில் உள்ள உள் உறுப்புகளையும் பாதிக்கிறது. பொதுவாகவே வலி நிவாரணிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக கிட்னியை பாதிக்கிறது என்கிறார்கள்.
இந்த மெஃப்தால் மருந்தின் எதிர்வினைகள், பாதகங்கள் குறித்து இந்திய பார்மாகோ விஜிலென்ஸ் என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. டிரஸ் சின்ட்ரோம் என்பது உடலில் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஆகும். சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், தோல் வெடிப்பு, ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மருந்து எடுத்த இரண்டு முதல் 8 வாரங்களுக்கு பிறகு இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளதாம். அதன்படி பெஃப்தால் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மருந்தியல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே மருத்துவர்கள் பரிந்துரையின்றி வலிக்காக இந்த வலி நிவாரணியை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications