காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை கணித்த வானிலை மையம் - எங்கே கரையை கடக்கும்
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா அல்லது புயலாக மாறுமா என்பது சில நாட்களில் தெரிய வரும்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. நாளை மறுநாள் 23ஆம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை கணிப்புக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாகவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. 23ஆம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கனமழை
அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலம் மத்திய மேற்கு பகுதியை நோக்கி நகரும். தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அரபிக்கடல் வங்கக் கடல்
ஒரே சமயத்தில் அரபிக் கடலிலும் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதனுடைய பாதை எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதை
மூன்று பாதைகள் கணிக்கப்பட்டுள்ளன. ஒரு பாதை தென் தமிழகம் இலங்கையை நோக்கி நகர்ந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து வட தமிழகத்தை கடந்து செல்வதாக காட்டுகிறது. மற்றொரு பாதை ஒடிசா வடக்கு பகுதியை கடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் இடம்
தற்போது வரை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும் என சரியான கணிப்பு தெரிவிக்கப்படவில்லை. அடுத்து வர கூடிய நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் போது அதனுடைய நகர்வு எப்படி இருக்கும், எந்த இடத்தில் கரையை கடக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா அல்லது புயலாக மாறுமா என்பது சில நாட்களில் தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications