Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடபழனி வரை எல்லாமே மாறுது.. பூந்தமல்லி- போரூர் மெட்ரோ ரயில் சேவையை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணியில் விறுவிறுப்பாக வேலைகள் நடக்கிறது. இதில் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வர திட்டமிட்டார்கள்.

Metro train service between Poonamallee- Porur will begin next month vadapalaini get good news

இதற்காக பூந்தமல்லி போரூர் இடையே சோதனை ஓட்டம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. அப்போது, பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளில் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடந்தது மேலும், இந்த வழித்தடத்தில் 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இன்னொரு புறம் போரூர் மற்றும் வடபழனி இடையேயும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பாதையை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பூந்தமல்லி, வடபழனி இடையே முழுபாதை நெடுகிலும் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 தொழிலாளர்கள் மேம்பால மற்றும் தளத் தகடு கட்டுமானப் பணிகளிலும், 600 பேர் தண்டவாளம் அமைக்கும் பணிகளிலும், மீதமுள்ள 400 பேர் இழுவை மற்றும் சிக்னல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பூந்தமல்லி வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்க சென்னை மெட்ரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது.

இது ஒருபுறம் எனில், ஏற்கனவே சோதனை ஓட்டம் நடந்து முடிந்த போதிலும், பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்காமல் இருந்தது. இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் இவ்வழித்தடத்தில் சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியிருப்பதன் மூலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

பூந்தமல்லி முதல் போரூர் வரை ஸ்டேஷ்ன்கள் எல்லாவற்றிலும் ரயில்கள் நிற்கும் ஆனால். போரூக்கு அடுத்து உள்ள எந்தஸ்டேஷனிலும் ரயில்கள் நிற்காமல் நேரடியாக வடபழனியில் வந்து நிற்கும்.. இது ஆரம்பகட்டம் தான். பணிகள் முடிந்த பின்னர், படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லும்.

இதற்கான பணிகளை சென்னை மெட்ரோ வேகமாக செய்து வருகிறது. வடபழனி-போரூர் பகுதிக்கு, ரயில்வே வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடமிருந்து அனுமதி பெறுவது எளிது என்பதால், உடனே அனுமதி கிடைத்துவிடும் என்கிறார்கள். எனவே பூந்தமல்லி வடபழனி இடையே மெட்ரோ ரயில் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக ஒடும் என எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+