சென்னையில் மட்டும் ஏன் CMDA.. இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூரிலும் பெருநகர் வளர்ச்சி குழு: பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) உள்ளது போல இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் ஆகிய நகரங்களிலும் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கான புதிய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் ஆகும் இது. அடுத்த 6 மாத வரவு, செலவுகள், திட்டங்கள் மீது கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை, கொரோனா நிவாரணம், உணவு, கல்வி, பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக நகர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை மீதும் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி உள்ளது.

 சாலைகள்

சாலைகள்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பேச்சில், நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். இந்த சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்படும். புதிய சாலைகளை கூடுதலாக அமைக்க வழி செய்யப்படும். தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெருநகரம்

பெருநகரம்

ரூ.17899 கோடி நெடுஞ்சாலைகள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) உள்ளது போல இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதியில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நகரங்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். கலைஞர் பெயரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்படும். அதேபோல் குக்கிராமங்களை மேம்படுத்த ரூ 1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

Recommended Video

    1000 புதிய பேருந்துகள்.. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க ஆய்வு.. மெருகேறும் போக்குவரத்துத்துறை..!
    குடிசை

    குடிசை

    அதற்கான பணிகளை குடிசை மாற்று வாரியம் செய்தும் வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராமப் புறங்களில் வீடுகள் இல்லாத 8,03,924 குடும்பங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் வீடுகள் வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்யும். 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+