சாரண சாரணியர் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு! எங்கோ கேள்விப்பட்ட மாதிரி பெயரா? ஹெச்.ராஜாவா?
சென்னை : தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் உள்ளது . இந்த அமைப்பின் தலைவர், து.தலைவர் உள்ளிட்டப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
பள்ளியில் படிக்கும் போதே கீழ்ப்படிதல் ராணுவம் போன்ற பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகள் மற்றும் திறன்களை வளர்க்கும் விதமாக சாரணர் இயக்கம் செயல்பட்டு வருகிறது.

சாரணர் தேர்தல்
மாவட்ட அளவில் நடக்கும் சாரணர் முகாம்களில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சாரணர்கள் என்றும் மாணவிகள் சாரணியர் என்றும் அழைக்கப்படுகின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த பேடன் பவுல் இந்த இயக்கத்தை தோற்றுவித்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் இந்த அமைப்பு பரவி இருக்கிறது. மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆளுநரும், இந்திய அளவில் குடியரசு தலைவரும் விருது வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்த இயக்கத்திற்கான தலைமையகம் சென்னை மெரினா கடற்கரை அருகே இருக்கும் நிலையில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தி தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். இந்நிலையில் தற்போது சாரணர் இயக்கத்தின் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த இயக்கத்தின் இயக்க புரவலராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். காரணம் கடந்த கடந்த முறை சாரணர் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக எச்.ராஜா
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பாஜகவின் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நிறைவுற்ற உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.ராஜா வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications