ஆக்ஷனை தொடங்கினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.. சர்கார் திரைப்படத்திற்கு சிக்கல்?
Recommended Video
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில், அதிமுக அரசை விமர்சனம் செய்யும் காட்சிகள் இடம் பிடித்துள்ளதாக சி.வி.சண்முகம் நேற்று குற்றம்சாட்டி பேட்டியளித்தார்.
[விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. சர்கார் பற்றி அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்!]
சினிமா என்ற போர்வையிலே, நடிக்கிறேன் என்ற போர்வையிலே இன்று அந்த திரைப்படத்தில் அரசின் திட்டத்தின் பொருட்களை விமர்சனம் செய்து, அதை எரிப்பது போன்ற காட்சியை காட்டி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்ற ஒரு தீவிரவாதியை போன்ற செயலை இன்று செய்திருக்கின்றார் என்று விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சர்கார் திரைப்பட விவகாரம் பற்றி ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.