ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.. அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டம்
சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவிரிப் படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கி உள்ளன.

இவற்றில் 67 இடங்களில் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை காவிரி படுகையில் எடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் காவிரி படுகையில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது தமிழகத்துக்கு இழைத்த அநீதி என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலளித்து பேசுகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.
இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எந்த காலத்திலும் அனுமதி வழங்கப்படாது. தமிழகத்தில் இருந்து ஹைட்ரோகார்பனை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
இதுவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு இசைவு வழங்கவில்லை. இனியும் வழங்க மாட்டோம். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தை அதிமுக அரசு தடுத்து நிறுத்தியது. செயல்படுத்தாத ஒரு திட்டத்துக்கு மக்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றனர் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications