மிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை: காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட மிட்டா மிராசுகளுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசித்துவிட்டு சென்னை திரும்புவதற்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அந்தக்காலம் தொடங்கி இந்தக்காலம் வரை வசதி படைத்தவர்களுக்கும், பெரும் நிலச்சுவான்தாரர்களுக்கும் மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், அதிமுகவில் மட்டுமே ஏழை எளிய கடைக்கோடி தொண்டன் கூட எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ வர முடியும் எனவும் கூறியுள்ளார்.
கோடீஸ்வரர் என்பதற்காக மட்டுமே ரூபி மனோகரனுக்கு நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் சீட் அளித்துள்ளதாக கூறிய ஜெயக்குமார், அதிமுக மட்டுமே அண்ணாவின் வழியை கடைப்பிடித்து எளியவர்களையும் அரசியலில் ஏற்றிவிடும் ஏணியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சிக்கு பாடுபட்ட அடிமட்ட தொண்டன் கூட உயர்பதவிகளுக்கு வருவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்..
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் திமுகவின் பொய் பரப்புரை இடைத்தேர்தலில் மக்களிடம் எடுபடாது எனவும் கூறினார். நடைபெறும் இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக தான் வெற்றிபெறும் என ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பெயரை ரூபி வெங்கடேசன் என மறந்தவாறு அவர் பேட்டியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications