குண்டர் சட்டம் போட்டது போலீஸ்.. ரத்து செய்தது கோர்ட்.. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை.. ஜெயக்குமார்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வயப்படுத்தி அவர்களை பலாத்காரம் செய்து பணம் பறித்தது அண்மையில் அம்பலமானது. இதையடுத்து திருநாவுக்கரசு, சபரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவு
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசுவின் தாயும் சபரிராஜனின் தாயும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது குறித்து உறவினர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படாததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

குண்டர் சட்டம் ரத்து
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்த கயவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும். குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காவல்துறை அதிகாரிகள் சிலர் துணை போயுள்ளனர்.

செயல்படவில்லை
சட்டத்தின் முன்பு நிறுத்தி தயவின்றி தண்டனை தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும்படியாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி விவகாரத்தில் யாருக்கும் ஆதரவாக நாங்கள் செயல்படவில்லை.

நீதிமன்றம்
குண்டர் சட்டத்தை போட்டது போலீஸ். அதை ரத்து செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். எனவே ஸ்டாலின் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றத்தைத்தான் கேட்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications