அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை... அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், கூட்டணி வலுவாக உள்ளதென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்றும், அவரது பேச்சின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை போலீஸ் எடுத்தது எனவும் அவர் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இதனைத் தெரிவித்தார்.

வலுவாக

வலுவாக

பா.ம.க.கூட்டணி இல்லையென்றால் அதிமுக ஆட்சி இல்லை என அன்புமணி ராமதாஸ் கடந்த 31-ம் தேதி பேசியிருந்த நிலையில் அதிமுக கூட்டணியில் விரிசல் என செய்தி பரவியது. இதனிடையே இன்று அது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி வலுவாக உள்ளதென்றும், உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கைது விவகாரம்

கைது விவகாரம்

தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது எனவும், வன்முறையை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் போலீஸ் கைது செய்திருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இதனிடையே எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும், குறிப்பிட்ட யாரையும் குறி வைத்து பேசவில்லை எனவும் கூறினார்.

புகார் வந்தால்

புகார் வந்தால்

அப்போதும் அமைச்சரை விடாத செய்தியாளர்கள், கல்லூரிக்குள் குண்டு வீசுவது தொடர்பாக ஹெச்.ராஜா பேசியதை சுட்டிக்காட்டி மீண்டும் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து உரியவர்கள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+