வரும் ஆனா வராது.. அமைச்சர் ஜெயக்குமார் பதிலால் சட்டசபையில் சிரிப்பலை
Recommended Video

சென்னை: வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த நிலையில் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி மாற்றம் எப்போது வரும் என எதிர்க்கட்சியான திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு கவிழ ஏராளமான சூழல்கள் நிலவிய போதிலும் அதிலிருந்து அதிமுக தப்பிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சட்டசபை இடைத்தேர்தலின் போது நிச்சயம் ஆட்சி கவிழும் என திமுக எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் ஸ்டாலினோ நிச்சயம் ஆட்சி கவிழும், திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என்றே கூறி வருகிறார்.
இதையேத்தான் திமுக பிரமுகர்களும் கூறி வருகின்றனர். இன்று சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சேகர்பாபு பேசுகையில் தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார், அவர்தான் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.
அப்போது நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான வரும் ஆனா வராது என அமைச்சர் ஜெயக்குமார் டைமிங்காக கூறிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications