பொங்கலுக்கு சிறப்பு பேருந்து முன்பதிவு தொடக்கம்.. தமிழகம் முழுவதும் 24708 பேருந்துகள் இயக்கம்
சென்னை: பொங்கலுக்கு சிறப்பு பேருந்து முன் பதிவு தொடங்கப்பட்டது. அதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 24708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கான சிறப்பு கவுன்ட்டர்களை திறந்து வைத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில் ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 24708 ஆகும்.
முன்பதிவு செய்வதற்காக சென்னையில் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான கணினி மையத்தையும் திறந்து வைத்துள்ளேன்.
கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், கே கே நகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து பெருங்களத்தூர் வழியாக செல்லாது.
வெள்ளிக்கிழமையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்குகிறது. ஆந்திரா செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். ஈசிஆர் சாலை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
வேலூர், ஆரணி, குடியாத்தம், ஆர்க்காடு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி வழியாக செல்லும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய 2.40 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மொத்தம் 4.92 லட்சம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு முதல் சுங்கசாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகளுக்கு என்று பிரத்தியேக வழி ஒதுக்கப்பட்டுள்ளது
. சென்னை மாநகரத்திற்குள் பேருந்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் செல்பவர்கள் வெளிசுற்று சாலை வாழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அதிகட்டனம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தீவிர நடவடிக்கையின் மூலமாக குறைந்து விட்டது. ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிதால் பேருந்து சிறை பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் கட்டண கொள்ளை குறைக்கப்பட்டுள்ளது.
சுங்கசாவடிகளில் நீண்ட வரிசையில் பேருந்துகள் நிற்கும் அவலத்தை தடுக்க,சுங்க சாவடிகளில் பேருந்துகளுக்கு என்று தனியாக வரிசை ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுங்க சாவடிகளில் போக்குவரத்து அதிகாரிகள்,போலீசார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் மட்டும் வருமானம் 17.47 கோடி ரூபாய், இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications