பெண்கள் வேலை பார்ப்பது குறைந்ததால் சிசேரியன் அதிகரிப்பு.. சொல்வது சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: சுகப் பிரசவங்கள் வெகுவாகக் குறைந்து, சிசேரியன் அதிகரிக்க காரணம் பெண்களுக்கு பணிச்சுமை குறைந்து உள்ளதுதான் எனக் கூறியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மேலும், சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைத்திட வல்லுநர்களின் உரையுடன் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

சிசேரியன் அதிகரிக்க காரணம்: இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால் கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது.
கேரளாவில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 18 என்ற அளவில் உள்ளது. அவர்களை விட மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே நோக்கம். மகப்பேறு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு உடற்பயிற்சி யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் பலனளித்துள்ளது. யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி போன்றவற்றை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கி வருகிறோம்.
தமிழ்நாட்டில் தான் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்: சுகப் பிரசவங்கள் மாநிலம் முழுவதும் அதிககரிக்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இந்தியாவில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். மருத்துவர்கள் சமூக வலைதளங்கள் வழியே அரசு மருத்துவமனை சேவைகளை பிரபலப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் அரசு மருத்துவ சேவைகளை விளம்பரப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் கடந்த ஆண்டு ஒரு லட்சம் பிறப்புகளில் 54 ஆக இருந்தது. அது தற்போது 44.5 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மத்திய அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோக பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில்: சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜ்ஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மரணம் பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது. தாய்மார்களுக்கான மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 99.9 % பிசரவங்கள், மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. இதில் 59% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.70 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5.04 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. 3.87 லட்சம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications