தமிழ் கடவுள் முருகன்! தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு! மனோ தங்கராஜ் வேதனை!
சென்னை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ள நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மனதில் தோன்றிய கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு'
''பாரம்பரிய மரபுகள் பற்றி பெருமையாக பேசும் தமிழ் சமூகம் காலம் காலமாய் பின்பற்றி வரும் மரபுகளை சிதைக்கும் முயற்சியை வேடிக்கை பார்க்குமா? வரலாறு நெடுக பலமுறை 'தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு' என்பது நடந்தேறியுள்ளது. அதன் நீட்சியே இந்த நடவடிக்கை. ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பழனி தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் கோவிலில் அவர்களின் அர்ச்சகம் செய்யும் உரிமைகளே பறிக்கப்பட்டன. ''

''தமிழில் அர்ச்சனைகள் செய்வதை மாற்றி சமஸ்கிருத அர்ச்சனையே விதியானது. சைவம், வைணவம், கௌமாரம், காணப்பதியம், சௌரம், சாக்தம் மற்றும் நாட்டார் வழக்கு தெய்வங்கள் வழிபாடு என்று பன்முகத் தன்மை கொண்ட தமிழர் வழிப்பாட்டு மரபுகளை ஒற்றை அடையாளத்தில் அடைத்து, இந்த சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு அடிப்பணியச் செய்தனர். கோவில் கருவறைக்குள் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று கொடிமரம் என்ற இந்த தடுப்புக்கான அளவுகோலும் அந்த வழிப்பாட்டு உரிமை மறுப்பின் நீட்சியே. இது தமிழரின் வழிப்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா என்பதெல்லாம் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றளவும் தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் இவ் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர்.
இன்றும் இந்து அல்லாத தமிழக இளைஞர்கள் டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் முருகன் வழிப்பாட்டு பாடல்கள் விரும்பி கேட்பதும், பாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பரிசு பெறுவதும் அவர்களின் குடும்பத்தாலே கொண்டாடுப் பட்டு வருகின்றன. இது அனைத்து சமய தமிழர்களின் மத நல்லிணக்கத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இந்த 'கொடிமரம் தடுப்பு அளவுகோல்' நடவடிக்கை தமிழ் நாட்டின் உன்னதமான மரபை இல்லாமல் செய்து, மத சர்வாதிகார போக்கை இங்கு நுழைக்கிறது. ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன ஆனால் மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications