தமிழ் கடவுள் முருகன்! தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு! மனோ தங்கராஜ் வேதனை!
சென்னை: பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ள நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மனதில் தோன்றிய கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு'
''பாரம்பரிய மரபுகள் பற்றி பெருமையாக பேசும் தமிழ் சமூகம் காலம் காலமாய் பின்பற்றி வரும் மரபுகளை சிதைக்கும் முயற்சியை வேடிக்கை பார்க்குமா? வரலாறு நெடுக பலமுறை 'தமிழர் வழிப்பாட்டு உரிமைகள் பறிப்பு' என்பது நடந்தேறியுள்ளது. அதன் நீட்சியே இந்த நடவடிக்கை. ஒரு காலத்தில் பண்டாரம் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பழனி தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் கோவிலில் அவர்களின் அர்ச்சகம் செய்யும் உரிமைகளே பறிக்கப்பட்டன. ''

''தமிழில் அர்ச்சனைகள் செய்வதை மாற்றி சமஸ்கிருத அர்ச்சனையே விதியானது. சைவம், வைணவம், கௌமாரம், காணப்பதியம், சௌரம், சாக்தம் மற்றும் நாட்டார் வழக்கு தெய்வங்கள் வழிபாடு என்று பன்முகத் தன்மை கொண்ட தமிழர் வழிப்பாட்டு மரபுகளை ஒற்றை அடையாளத்தில் அடைத்து, இந்த சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு அடிப்பணியச் செய்தனர். கோவில் கருவறைக்குள் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்று கொடிமரம் என்ற இந்த தடுப்புக்கான அளவுகோலும் அந்த வழிப்பாட்டு உரிமை மறுப்பின் நீட்சியே. இது தமிழரின் வழிப்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்கா என்பதெல்லாம் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றளவும் தமிழ் நாட்டில் உள்ள பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் இவ் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருகின்றனர்.
இன்றும் இந்து அல்லாத தமிழக இளைஞர்கள் டிஎம் சௌந்தரராஜன் அவர்களின் முருகன் வழிப்பாட்டு பாடல்கள் விரும்பி கேட்பதும், பாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பாடி பரிசு பெறுவதும் அவர்களின் குடும்பத்தாலே கொண்டாடுப் பட்டு வருகின்றன. இது அனைத்து சமய தமிழர்களின் மத நல்லிணக்கத்தின் அடையாளம் ஆகும். ஆனால் இந்த 'கொடிமரம் தடுப்பு அளவுகோல்' நடவடிக்கை தமிழ் நாட்டின் உன்னதமான மரபை இல்லாமல் செய்து, மத சர்வாதிகார போக்கை இங்கு நுழைக்கிறது. ஆன்மிக தளங்கள் எல்லோரையும் ஆதரிக்கின்றன ஆனால் மதத் தளங்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications