என்ன சார் வேலை செய்றீங்க! பத்திரப்பதிவு துறை அதிகாரியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய அமைச்சர் மூர்த்தி!
சென்னை: சென்னை முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு நடத்திய அமைச்சர் மூர்த்தி கேள்விக்கணைகளால் அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளார்.
'டோக்கன் விவரம் கூட தெரியாம என்ன சார் வேலை செய்றீங்க' என ராயப்பேட்டை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் அமைச்சர் மூர்த்தி.
மேலும், ஆய்வுக்கு சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்களை அழைத்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்த அலுவலகத்தில் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா, வேலை உடனே முடியுதா இல்லை காத்திருக்க வைக்கிறார்களா என கேட்டறிந்து கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழா பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தனது அதிரடி ஆய்வுகள் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. சென்னை முழுவதும் நேற்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்திய அவர் அதிகாரிகளை கேள்விக்கணைகளால் வளைத்து திகைக்க வைத்திருக்கிறார்.

அமைச்சர் பாய்ச்சல்
சக அதிகாரிகள், ஊடகத்தினர் முன்னிலையிலேயே 'டோக்கன் விவரம் கூட தெரியாம என்ன சார் வேலை செய்றீங்க' என ராயப்பேட்டை பத்திரப்பதிவுத் துறை அதிகாரியை எல்லோர் முன்னிலையிலும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார் அமைச்சர் மூர்த்தி. மேலும், தன்னிடம் சிரித்து பேசிய பொதுமக்களிடம் கூட என்ன டென்ஷனோ தெரியவில்லை, முகத்தை கடுகடுவென வைத்திருந்தார் அமைச்சர் மூர்த்தி.

லஞ்சம் கேட்கிறார்களா?
இதனிடையே பத்திரவுப்பதிவுத் துறை அலுவலகங்களில் அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ஒரு சிலரும், வேலை உடனே முடிந்துவிடுகிறது என ஒரு சிலரும் பொதுமக்கள் பல வித கருத்துக்களை அமைச்சரிடம் பகிர்ந்துகொண்டனர். இதனிடையே இந்த அலுவலகத்தில் உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டார் மூர்த்தி.

அதிகாரிகளுக்கு அறிவுரை
ஆய்வுகளை முடித்துவிட்டு புறப்படும் போது பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, வில்லங்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்த்து பதிவு செய்து கொடுக்குமாறும் கவனமில்லாமல் ஏனோ தானோ என்று வேலை செய்தால் இப்போது இருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை பெறக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்து சென்றார்.












Click it and Unblock the Notifications