அண்டை மாநில வணிகர்கள்.. தமிழக விவசாயிகளின் காய்கறிகளை வாங்க கொள்முதல் மையங்கள்.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை: வேளாண் துறை பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அண்டை மாநில வணிகர்கள் காய்கறி கொள்முதல் செய்ய 3 மாவட்டங்களில் கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் நேற்று தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் தவழும் குழந்தையாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த அந்த ஆண்டு வேளாண் பட்ஜெட் நடந்து செல்லும் குழந்தையாக இருந்தது என்றும் அடுத்த ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட் ஓடும் குழந்தையாகும் என்றும் கூறி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் வேளாண் துறை குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும் என்று எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாகக் கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
Recommended Video
அதேபோல தீவன பற்றாக்குறையை போக்க ஒருங்கிணைந்த பசும் தீவன உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என அறிவித்த அமைச்சர், விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications