‘பசு நேசர்’ ஆன நாசர்.. 2 மணி நேரமா நகரவே இல்லையே.. சாலையில் துடித்த பசுமாட்டை மீட்ட அமைச்சர்! அட!
சென்னை : சாலை விபத்தில் சிக்கி வலியில் துடித்துக்கொண்டிருந்த பசுவை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், முதலுதவி செய்து, மீட்டு பாதுகாப்பாக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபிறகே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி, திருமுல்லைவாயில் பகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசர் இன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் நாசரின் கார், ஒரு இடத்தில் திடீரென பிரேக் அடித்தது. அதற்குக் காரணம் ஒரு பசுமாடு.

திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே விபத்தில் சிக்கிய பசுமாடு ஒன்று சாலையில் காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தது. காலில் அடிபட்டதால் எழுந்து சாலையோரம் செல்லக்கூட முடியாமல் பசு மாடு தவித்துக்கொண்டிருந்த நிலையில், அதை அங்கிருந்து நகர்த்த முடியாமல் பசுமாட்டை சுற்றி பலரும் நின்றிருந்தனர்.

இதனைக் கண்ட அமைச்சர் நாசர் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, உடனடியாக பசு மாட்டிற்கு அருகே சென்று பார்த்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். பசுவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அதனை அங்கிருந்தோர் உதவியுடன் எழுப்ப முயன்றார். மேலும் காயம்பட்டு விடாமல் பாதுகாப்பாக சாலையோரத்திற்கு நகர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.

பசு மாட்டுக்கு அடி பலமாக பட்டிருப்பதை உணர்ந்து, உடனடியாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து முதலுதவி செய்ய ஏற்பாடு செய்தார். ஆனாலும், பசு மிகவும் சுனங்கிக் காணப்பட்டதால், தனி வாகனம் ஒன்றை வரவழைத்து அதில் பசுமாட்டினை ஏற்றி வேப்பேரி கால்நடை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
சுமார் 2 மணி நேரமாக அப்பகுதியிலேயே இருந்து பசுவுக்கு முதலுதவிகள் செய்து, அதனை மீட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை உடனிருந்தார் அமைச்சர் நாசர். பின்னர், கால்நடை மருத்துவர்களிடம், முறையான சிகிச்சை அளித்து, தனக்கு அப்டேட் செய்யும்படி உத்தரவிட்டார்.
இந்தச் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் 'பசு நேசர்' அவதாரமெடுத்து, பசுவுக்காக 2 மணி நேரம் அங்கேயே காத்திருந்தது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.

முன்னதாக, அமைச்சர் நாசர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அண்மையில், திமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்டபோது, நீண்ட நேரமாக அமர நாற்காலி எடுத்து வராததால் கட்சித் தொண்டரை கல்லால் அடிக்க முயன்ற வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதேபோல, ஆவின் பால் விநியோகத்தில் தாமதம், ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் பற்றாக்குறை, ஆவின் பால் முகவர்கள் தொழிலாளர்கள் போராட்டம் என பல்வேறு நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். இந்நிலையில், இன்று பாசிட்டிவ்வான வகையில் அமைச்சர் நாசர் ட்ரெண்டாகியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications