கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடுகிறார்! அமைச்சர் ஆவடி நாசர் ஆவேசம்!
சென்னை: தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடிக்கொள்கிறார் என அமைச்சர் நாசடி ஆவேசம் காட்டியுள்ளார்.
ஆவினில் இன்னும் தயாரிக்கப்படாத ஒரு பொருளை, ஏன் சுகாதாரத்துறை வாங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருப்பது அவர் படித்த ஐ.பி.எஸ். படிப்புக்கு அழகல்ல என அமைச்சர் நாசர் சாடியிருக்கிறார்.
அமைச்சர்கள் எல்லாம் தனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பார்கள், அதை வைத்து விளம்பரம் தேடலாம் என்பதே அண்ணாமலையின் எண்ணம் என அவர் கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து பவுடர்
தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடர் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் நாசர் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர். அதில் அண்ணாமலை எப்படி ஐ.பி.எஸ். படித்தார் என தெரியவில்லை என்றும், ஆவினில் தயாரிக்கப்படாத ஒரு பொருளை சுகாதாரத்துறை ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருப்பது நகைப்புக்குரியது என சாடினார்.

நிறைய வேறுபாடு
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து பவுடருக்கும் ஆவினில் இனி மேல் தயாரிக்க இருக்கக் கூடிய ஊட்டச்சத்து பவுடருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் ஆவின் தயாரிப்பு ஊட்டச்சத்து பவுடரை பொறுத்தவரை இப்போது தான் முதல் நிலை ஆய்வில் இருப்பதாகவும் இன்னும் தயாரிப்பு பணிகளே தொடங்கவில்லை எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். அப்படியிருக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பவுடரை ஆவினில் ஏன் வாங்கவில்லை என அண்ணாமலை வினவியுள்ளதாக கூறினார்.

கேவலமான அரசியல்
பாஜகவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கேவலமான முறையில் அண்ணாமலை விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்றும் தன்னை போன்ற அமைச்சர்கள் பதிலளிப்பதன் மூலம் அண்ணாமலை விளம்பரம் அடைகிறார் எனவும் அமைச்சர் நாசர் கூறினார். சுய விளம்பரத்திற்காக அண்ணாமலை கடைநிலை அரசியல் செய்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவேசம் காட்டியுள்ளார்.

அண்ணாமலை கேள்வி
அமைச்சர்கள் ஒரு பக்கம் இப்படி விளக்கமளித்து பதிலடி கொடுத்து வரும் சூழலில், அண்ணாமலை அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களையும், கேள்விகளையும் தமிழக அரசை நோக்கி முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எதிர்க்கட்சி பாஜகவா, அதிமுகவா என்ற விவாதமும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டுள்ளது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications