தெளியவிட்டு அடித்த பிடிஆர்! ஓரவஞ்சனை செய்தும் வாய்ப்பில்லை ராஜா! சொல்றது யாருன்னு பாருங்க?
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு அமைச்சர் பிடிஆர் எழுதியுள்ள கட்டுரை குறித்து புகழாரம் சூட்டியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் திருஞானம். இது குறித்து தனது சமூகவலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;
''உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று சில வாரங்களுக்கு முன்தமிழ்நாட்டு சங்கிகள் கொண்டாடித் தீர்த்தனர். வாட்ஸப் யூனிவர்சிட்டிக் காரர்களின் அறிவின்மையை தெளியவிட்டு அடித்துள்ளார் பி.டி.ஆர். உண்மையான புள்ளி விபரங்களுடன் தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் பொருளாதாரங்களை ஒப்பிட்டு அமைச்சர் பிடிஆர் எழுதியுள்ள கட்டுரை frontline india வில் வெளிவந்துள்ளது.''

''கடந்த 5 ஆண்டுகளாக, உ.பி.யின் GDP per capita வளர்ச்சி தமிழ்நாட்டின் GDP per capita வளர்ச்சியைவிட2% குறைவாக உள்ளது. இதில் ஏதோ மேஜிக் நடந்து உ.பி.யின் GDP per capita வளர்ச்சி தமிழ்நாட்டின் GDP per capita வளர்ச்சியைவிட 2% அதிகமாக உயர்ந்து உலக சாதனை படைத்துவிட்டால் கூட, தமிழ்நாடு ஏற்கெனவே அடைந்துள்ள GDP per capita வளர்ச்சியை உ.பி. எட்டிப்பிடிக்க இன்னும் 60+ ஆண்டுகள் ஆகும் என்று அடித்துச் சொல்கிறார் நம்ம PTR.''
''தென் மாநிலங்களிடம் நிதியைப் பிடுங்கி உ.பி.க்கு வாரிக்கொடுக்கும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை பற்றிய அதிர்ச்சித் தகவல்களை வில்சன் எம்.பி. நேற்று அம்பலப்படுத்தி இருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் தென்மாநிலங்கள் கொடுத்த வரி ரூ. 22 லட்சம் கோடி வாங்கியது வெறும் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் இதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம் கொடுத்தது ரூ. 3 லட்சம் கோடி , வாங்கியது ரூ. 7 லட்சம் கோடி.'' ஆனால் இதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம் கொடுத்தது ரூ. 3 லட்சம் கோடி வாங்கியது ரூ. 7 லட்சம் கோடி.''
''இப்படி ஓரவஞ்சனை செய்து நிதி கொடுத்தாலும் உ.பி மாநிலம் பின்தங்கி இருப்பதற்கு ஒரே காரணம் அங்கே ஆட்சி செய்வது கோமியக் கோட்பாடு என்பது தான்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications