செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன்! ஆஜராகாத அசோக்! எங்கே இருக்கிறார்?
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஐடி அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மூளையாக செயல்படும் அவரது தம்பி அசோக்குமார் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நடத்தச் சென்ற போது தான் அசோக்குமார் இல்லம் முன்பாக பெண் ஐடி அதிகாரியை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.

அதேபோல் அதிகாரிகள் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு வருமாறு 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அதனை அசோக் குமார் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் அடுத்ததாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வருமான வரித்துறை தரப்பில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அசோக்குமார் எங்கு தான் இருக்கிறார் என்ற வினாவும் எழுந்துள்ளது. சொந்த அண்ணன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தருணத்தில் கூட அசோக்குமாரை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
அதேபோல் கோவை கண்டனப் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளிலும் அசோக் குமார் தலைகாட்டவில்லை. அசோக்குமாரை பொறுத்தவரை செந்தில்பாலாஜியின் நிழல் போல் அவரது கண் அசைவுகளுக்கு ஏற்பவும், எண்ணவோட்டங்களுக்கு ஏற்பவும் காரியமாற்றக் கூடியவர்.
அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்கு காரணம் அவர் கட்டி வரும் புது வீடு தான். பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அந்த வீட்டால் தான் விணையே வந்திருப்பதாக கருதுகிறார் அசோக்குமார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications