கொதித்த தமிழ்நாடு.. திருமண மண்டபத்தில் மது! அரசாணை மாற்றம் - எங்கு அனுமதி? விளக்கிய செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பரிமாற சிறப்பு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட அரசாணை கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு திரும்பப்பெறப்பட்ட நிலையில், இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்து உள்ளார்.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை பரிமாற சிறப்பு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை இன்று காலை முதல் பெரும் விவாத பொருளாக மாறியது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது சிறப்பு மதுபான அனுமதியை அரசு ரத்து செய்து உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கி 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களைக் கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commerclal Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Corvention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருந்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது."
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைந்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுபற்றி விளக்கம் கொடுத்தார். அதில்,
"வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபான வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் கர்நாடகா, மகாராஷ்டிரா புது தில்லி போன்ற சில மாநிலங்களில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் அவ்வாறு வழங்கிட 18.03.2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிக்கையில் திருமண கூடங்களும் இதர இடங்களும் இடம் பெற்றன. இது குறித்து பெறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி வரைமுறைப்படுத்தி உள்ளது." என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications