‘ஆட்டுக்குட்டி’ ஓட்டுக்கு ஆயிரம்! நேர்ல வாங்க பேசிக்கலாம்..அண்ணாமலையிடம் தேதி கேட்ட செந்தில் பாலாஜி!
சென்னை : அரவக்குறிச்சி தொகுதியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும், பாஜக மாநில தலைவராக இருந்தும் தோல்வியடைந்த விரக்தியில் அண்ணாமலை திமுக குறித்து அவதூறாக பேசி வருவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மேலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக கட்டண மாற்றம் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக பேசிய அவர்,"தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?" என கூறியிருந்தார்

விரக்தியில் அண்ணாமலை
இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தும், பாஜக மாநில தலைவராக இருந்தும் தோல்வியடைந்த விரக்தியில் அண்ணாமலை திமுக குறித்து அவதூறாக பேசி வருவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," நான் நேர்மையானவர். என்னுடைய சம்பளத்தில் சேர்த்து வைத்த ஆட்டுக்குட்டிகள் தான் இருக்கிறது என்கிறார்.

ஆட்டுக்குட்டி
அவ்வாறு ஆட்டுக்குட்டி மேய்த்து கிடைத்த பணத்தில் அரவக்குறிச்சி மக்களுக்கு ஒரு வாக்குக்கு அண்னாமலை ஆயிரம் ரூபாய் கொடுத்தது எப்படி? மக்களை ஏமாற்றி வரக்கூடிய சூழலில் அவரை அப்படியே அடையாளம் தெரியாமல் மக்கள் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் கோபத்தின் அடிப்படையில் தான் பாஜக அண்ணாமலை பேசி வருகிறார். தற்போது பாஜகவினர் தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து பேசி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள்
மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் உள்ள மின்சார கட்டணம் குறித்து நான் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்க தயார். எப்போது வேண்டுமானாலும் கேட்டு சொல்லுங்கள் நான் விவாதிக்கிறேன். மின்சார கட்டணம் தொடர்பாக அவர் சொல்லக்கூடிய கருத்துக்கள் குற்றச்சாட்டுகள் என அனைத்துக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன் அவர் சொல்வது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என்பதை நான் நேரிலேயே நிரூபிக்க தயார்.
Recommended Video

பதிலளிக்க தயார்
பாஜக ஆளும் மாநிலங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அது பற்றி எல்லாம் அண்ணாமலைக்கு கவலை இல்லை மின்கட்டணம் தொடர்பாக போராட்டம் நடத்தும் அவர்கள் கேஸ் பெட்ரோல் விலை உயர்வு குறித்து போராட்டம் நடத்துவார்களா? கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விரக்தியில் என் மீதும் திமுக அரசு குறித்தும் அண்ணாமலை அவதூறு பரப்பி வருகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications