Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை! ஆபரேஷன் எப்படி நடக்கும்? விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை எப்படி நடக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Minister Senthil Balaji will undergo bypass operation at 4 am june 21, Do you know how it will happen?

இந்த பரிசோதனையின்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில் தான் இன்று(புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் எனும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பைபாஸ் அறுவை சிகிச்சை எப்படி நடக்கும்? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதயத்துக்கு ரத்தம் எடுத்து செல்லும் நாளங்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அடைப்புகள் இருந்தால் மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும். செந்தில் பாலாஜிக்கும் இதயத்தின் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதால் தான் நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் நோக்கம் என்னவெனில் இதயத்தின் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளுக்கு பதிலாக மாற்று வழியில் இதயத்துக்கு ரத்தத்தை சீராக எடுத்து செல்வது தான். இந்த சிகிச்சை செய்யும்போது முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மயக்க மருந்து கொடுக்கப்படும். அவர் மயங்கிய நிலையில் இருக்கும்போது அவரது மார்பு பகுதியில் லேசாக வெட்டி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அதாவது இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் அடைப்புள்ள ரத்த நாளங்களுக்கு பதிலாக புதிதாக ரத்த பாதைகள் உருவாக்கப்படும். இதற்காக கால்களில் இருக்கும் நரம்புகள் டாக்டர்கள் வெட்டி எடுத்து பாதிக்கப்பட்ட ரத்து நாளங்களுக்கு பதிலாக பொருத்துவார்கள். இந்த சிகிச்சை முடிய 3 முதல் 4 மணிநேரங்கள் வரை ஆகும். இந்த வகையில் தான் நாளை செந்தில் பாலாஜிக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 முதல் 5 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். அதன்பிறகு நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார். மேலும் கால்களில் இருந்து நரம்புகள் எடுக்கப்படும் என்பதால் நடப்பதில் சிரமம் இருக்கும். இருப்பினும் ஒருவார பயிற்சிக்கு பிறகு இயல்பாக நடக்க முடியும். அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வு எடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மாத்திரை, மருந்துகள் எடுத்து கொண்டால் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+