ஹை டென்சனில் அரசு.. கிளாம்பாக்கத்தால் தொடரும் சர்ச்சை! சதி நடக்குதாம் - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு வந்து செல்லும் பேருந்து முனையமாக பல ஆண்டுகளாக கோயம்பேடு இருந்து வந்தது. இந்த நிலையில் வெளி மாவட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் மிகப்பெரிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் சென்னைக்கு உள்ளே இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சென்று பழக்கப்பட்ட மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

சென்னை மாநகருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து வர முறையான போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வரும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்தே வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை கண்டித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டமும் நடத்தினர்.
மறுபக்கம் இரவு நேரத்தில் கிளாம்பாக்கம் வரும் பயணிகளை அழைத்து செல்ல போதிய பேருந்துகள் இல்லை என்பதால் பேருந்து நிலைய நடைமேடைகளிலேயே பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி செல்லும் பேருந்துகள் இல்லை என்று கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 2 வது நாளாக நேற்று இரவு போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நள்ளிரவு நேரத்தில்தான் பேருந்துகள் இல்லை என்ற புகார் எழுந்து உள்ளது. காலை, மாலை நேரங்களில் பேருந்துகள் குறைவு என்ற பிரச்சனை இல்லை. திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் சென்றன. அதிக அளவிலான பயணிகள் வந்த காரணத்தால் 130 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பப்பட்டன
குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயங்குகிறது என்ற செய்தியை பரப்பினால், பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் ஏறுவார்கள் என்ற நோக்கில் உள்நோக்கத்தோடு இதனை சிலர் செய்து வருகிறார்கள். சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். விரைவில் முடிச்சூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும்." என்றார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications