குடிநீர் வடிகால் வாரியம் செயல்பாடு... எ.வ.வேலு கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில்
சென்னை: கடந்த 8 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 11,140 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இன்னும் அதிகம் கட்டப்படும் அவர் உறுதியளித்தார்.

ஓவர் டேங்க்
உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தான் நமது அன்றாட அடிப்படை தேவைகளான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பைப்லைன் தொடங்கி கூட்டு குடிநீர் திட்டங்கள் வரை இந்த வாரியம் ஆற்றும் அரும் பணிகள் ஏராளம். ஆனால் நம்மில் பலருக்கு இப்படியே ஒரு வாரியம் இருப்பதே தெரியாது.

குடிநீர் வாரியம்
திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இப்போது அந்த வாரியத்தின் செயல்பாடு குறைந்து வருவதாகவும் கூறினார். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

11,140 டேங்க்
திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 8 ஆண்டுகளில் 11,140 பாதுகாக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் நிதி கிடைத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கோ ஆப்டெக்ஸ்
இதனிடையே கோ ஆப்டெக் விற்பனை நிலையம் அமைக்க இடம் கிடைப்பது அரிதாக உள்ளதாகவும், உரிய இடம் கிடைத்தால் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அதிகரிக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications