விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதிக்கு வருகை புரிந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பிரச்சனைக்குரிய சுடுகாட்டுப் பகுதிக்கு சென்ற அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடுகாட்டுப் பகுதியை மீட்டு கொடுக்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் நேரில் வலியுறுத்தியதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர். அவர்களிடம் நான் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம் என்று அமைச்சர் வன்னியரசு ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பெரிய கோட்டகுப்பம் பகுதியில் அதே பகுதி சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது சம்பந்தமாக, நடுக்குப்பம் மீனவ கிராம மக்களுக்கும் பெரிய கோட்டகுப்பம் ஆதிதிராவிட இன் மக்களுக்கும், இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோட்டகுப்பம் பகுதியில் வீடுகள் சூறையாடப்பட்டு ஒருவருக்கொருவர் மோதி கொண்டதில் ஐந்து போலீசார் உட்பட பலபேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் பெரிய கோட்டகுப்பம் பகுதிக்கு வருகை புரிந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பிரச்சனைக்குரிய சுடுகாட்டுப் பகுதிக்கு சென்ற அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடுகாட்டுப் பகுதியை மீட்டு கொடுக்க வேண்டும் என, அந்த பகுதி மக்கள் நேரில் வலியுறுத்தியதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், இரண்டு சமூகமும் இணக்கமாக வாழ வேண்டும் என்பதுதான் நமது அரசின் விருப்பம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வனனியரசு, ஆதிதிராவிட இன மக்களுக்கு வருவாய் துறை மூலம் 43 செண்டு சுடுகாட்டுக்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த இடத்தை மீட்டு கம்பிவேலி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
ஆதிதிராவிட இன மக்களின் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அதையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,
அதே போன்று வீடுகளை சூறையாடி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நமது அரசு மக்களுக்கான நல்வழி காட்டும் அரசு இரண்டு சமுதாய மக்களும் இனக்கமாக வாழ வேண்டும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
நடந்த சம்பவங்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இனிமேல் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். நாளை நடைபெறும் அமைதி கூட்டத்தில் மீனவர்கள் படகுகள் எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டு உரிய தீர்வு காணப்பட உள்ளது.
43 சென்ட் என்பது ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாட்டுக்கான இடம் அங்கே படகுகளை நிறுத்துவது என்பது ஏற்புடையதல்ல அதேபோன்று மீனவ மக்களும் பாதிக்காத வகையில் அவர்கள் படுகுகளை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்பதுதான் தற்போது உள்ள பிரச்சனையாக உள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரச்சனைகள் உள்ளது அவைகளை கணக்கெடுப்பு நடத்தி ஓராண்டு காலத்தில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வன்னியரசு உறுதி அளித்தார்.
-
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!














Click it and Unblock the Notifications