சென்னை மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அற்புதம்.. வியந்து போய் பார்த்த போலீஸ்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை மணலில் அற்புதான சிலை ஒன்று கிடைத்துள்ளது. அதை பார்த்து வியந்து போன போலீசார், இதை யாராவது கடத்தல் கும்பல் இங்கு போட்டார்களா என்று சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். சனி , ஞாயிறு உள்பட வார இறுதி நாட்கள், மற்றும் விடுமுறை நாட்களில லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக இருக்கிறது. மெரினாக கடற்கரை என்பது அண்ணா சதுக்கம் தொடங்கி பட்டினம்பாக்கம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் காணப்படுகிறது.. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, கலைஞர் சமாதி,ஜெயலலிதா சமாதி என நினைவிடங்களும் இங்கு தான் இருக்கின்றன. தமிழகத்தின் அரசியல் மற்றும் நினைவுச்சின்னங்களின் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தளமாக இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில், ஜெயலலிதா சமாதிக்கு பின்புறம் உள்ள கடற்கரை மணலில் புதைந்த நிலையில் ஐம்பொன் சிலை ஒன்று ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. அந்த வழியாக ரோந்து சென்ற கடலோர காவல்படை போலீசார் அதனை கண்டெடுத்தனர்.
அந்த சிலை விலை மதிப்புள்ள காலபைரவர் சிலை என்பதை கண்டறிந்தனர். இந்த சிலை சுமார் ஒரு அடி உயரம் இருந்தது. சிலை கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்கள் யாராவது, இந்த காலபைரவர் சிலையை அங்கு போட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த சிலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கால பைரவர் சிலை கண்டெடுக்கப்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













Click it and Unblock the Notifications