வேளாண் பட்ஜெட்டில் இயற்கை மணக்கிறது! விவசாயிகள் மீது பன்னீர் தெளிக்கப்பட்டிருகிறது!-தமிமுன் அன்சாரி
வேளாண் பட்ஜெட்டை வேற லெவலில் பாராட்டும் தமிமுன் அன்சாரி.
சென்னை: வேளாண் பட்ஜெட்டில் இயற்கை மணப்பதாகவும் விவசாயிகளின் வியர்வைக்கு நன்றி கூறும் வகையில் பன்னீர் தெளிக்கப்பட்டிருப்பதாகவும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வெயிலில் உழைத்திடும் விவசாயிகளை தொழில்நுட்ப உலகத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

வேளாண் நிதி நிலை அறிக்கை
இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம் இரண்டு மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் இயற்கை மணக்கிறது எனலாம். உலகிலேயே தனக்கான உணவை தயாரித்து கொள்ளும் அறிவை மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த மாபெரும் கடமையை விவசாயிகள் செய்கிறார்கள்.

வேளாண் தொழில் வழித்தடம்
அந்த வகையில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நலன் சேர்க்கும் வகையில் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையை 'திராவிட மாடல்' அரசு செய்து வருகிறது.இதற்காக 38,904 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. கூட்டுறவு பயிர் கடன் வழங்க 14 ஆயிரம் கோடி, திருச்சி, நாகை இடையே வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க 1000 கோடி, ஆடு, மாடு, கோழி வளர்க்க உதவிட 1000 கோடி, நுண்ணுயிர் பாசன திட்ட மேம்பாட்டுக்கு 450 கோடி என நிதி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இயற்கை மணக்கிறது
உணவு பதப்படுத்தும் தொழிச்சாலைகள், கிடங்குகள் அமைக்க ஊக்குவிப்பு, 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள் முதல் செய்ய இலக்கு, விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்க திட்டம், 550 ஹெக்டேரில் கூடுதலாக முந்திரி சாகுபடியை விரிவுப்படுத்துதல், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை, முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க திட்டம், குளிர்கால பயிர் சாகுபடிக்கு மானியம், 4 மாவட்டங்களில் புதிதாக மிளகாய் மண்டலங்கள் அமைப்பு, கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை, உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, தேனி வாழைக்கு தனி அடையாளம் பெற தொகுப்பு நிதி, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு, வெளிநாட்டு வேளாண் முறையை தமிழகத்தில் அமல்படுத்தல், விவசாயிகள் அயல் நாட்டில் பயிற்சி பெற திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா திட்டம், கழிவிலிருந்து இயற்கை உறம் தயாரித்தல் என நிதிநிலை அறிக்கை முழுக்க விவசாயிகளின் வியர்வைக்கு நன்றி கூறும் வகையில் பன்னீர் தெளிக்கப்பட்டிருக்கிறது.

தக்காளி -வெங்காயம்
மிக முக்கியமாக அன்றாட உணவு தேவைகளான தக்காளி, வெங்காயம் ஆகியவை சீராக கிடைத்திட சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பது இந்த நிதி நிலை அறிக்கையின் நோக்கத்தை கோடிட்டு காட்டுகிறது. வெப்பத்தில் உழைத்திடும் விவசாயிகளை தொழில்நுட்ப உலகத்திற்கு அழைத்து செல்லும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையை தயாரித்த வேளாண் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், தக்க முறையில் வழி காட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறோம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications