அன்னையர் தினம்.. உயிரின் கருவான தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற மு.க. ஸ்டாலின்
சென்னை: இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது என அன்னையர் தின வாழ்த்துகளை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாய் தயாளு அம்மாளை கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

ஆண்டுதோறும் தனது பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம் ஆகிய தினங்களில் தாய் தயாளு அம்மாளை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெறுவது வழக்கம்.
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறுகையில்
உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது! என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications