தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்தவருக்கு இவ்வளவு ஆணவமா..? உணர்வுடன் விளையாட வேண்டாம் -மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம் என்றும் சிறு பொறி தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை இந்தி தெரியாததால் கடன் கிடையாது எனக் கூறி ஐ.ஓ.பி. வங்கி அதிகாரியால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Mk Stalin Says, Do not play with Tamil people consciousness

இதனிடையே மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு;

''ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, 'இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது' என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி!

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?

எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!'' இவ்வாறு ஸ்டாலின் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பான செய்தியின் முழு விவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்;

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+