’ராமதாஸுக்கு தான் முழு அதிகாரம்’ என பேசிய எம்எல்ஏ அருள் பாமகவில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி
சென்னை: பாமகவில் இருந்து எம்எல்ஏ அருளை நீக்கம் செய்து கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருள் நீக்கப்படுவதாகவும், அருளுடன் பாமகவில் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் ரா அருள் நீக்கப்படுகிறார் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30 -இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக எம்.எல்.ஏ அருள் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அருள் கூறுகையில், "பதவிக்காக பெற்ற அப்பாவையே விட்டு போகிறார் அன்புமணி. எதிர்காலத்தில் அன்புமணி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக் கூடாது. பொறுப்பாளர்களை நியமிப்பதற்கும், மாற்றுவதற்கும் ராமதாசுக்கே முழு உரிமை. அப்பாவை மகன் மதித்து நடப்பது தான் தமிழ்நாட்டின் பாரம்பரியம்" என்று கூறியிருந்தார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ராமதாசுக்கு பிடிக்கவில்லை. தற்போது அவர் திமுகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் மகன் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்.
இந்த விவகாரத்தில் தான் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் அறிவித்து இருக்கிறார். இதற்கிடையே டெல்லி சென்றுள்ள அன்புமணி ராமதாஸ் அமித்ஷா, ஜேபி நட்டா மற்றும் தேர்தல் ஆணைய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் அருள் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications