Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிவி நேரலை எதிரொலி! அரட்டையும் இல்லை சிரிப்பும் இல்லை! அமளியின்றி அமைதியான கூட்டத்தொடர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வரலாற்றில் முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டதால், அவையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டதை அறிய முடிந்தது.

உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும் போது சக உறுப்பினர்களின் அரட்டைகளையோ, கேலி கிண்டல் தமாஷ்களையோ சட்டமன்றத்தில் பார்க்க முடியாதது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தாமதமாக வருவது, பேரவை நிகழ்வின் போது அடிக்கடி வெளியே எழுந்து செல்வது போன்றவற்றையும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துவிட்டனர்.

டிவி நேரலை

டிவி நேரலை

தமிழக அரசியல் வரலாற்றில் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்பது. இந்நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2 நாட்களாக லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் சட்டப்பேரவையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை வீட்டின் வரவேற்பரையில் அமர்ந்தே அறிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அனைத்துக்கட்சிகளிலும் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என ஆசைப்பட்டு அது நிறைவேறாத பலருக்கும் இந்த நேரலை சற்று ஆறுதலை கொடுத்திருக்கும் என்றே கூறலாம். சட்டமன்றத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்பதை பாமரனும் அறிந்துகொள்ள இந்த நேரலை வழிவகுத்துள்ளது.

 மிகுந்த பொறுப்பு

மிகுந்த பொறுப்பு

இதனிடையே முந்தைய கூட்டத்தொடர்களை காட்டிலும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்று மாறுபட்டிருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களை தொலைக்காட்சி மூலம் மக்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை உணர்ந்து மிகுந்த கவனமுடன் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேரவையில் பேசி தேவையற்ற சலசலப்புகளை தவிர்த்ததை காண முடிந்தது. அதேபோல் சட்டமன்றத்தில் இருந்து வெளியே எழுந்து செல்வதும், தங்களுக்குள் சிரித்துப் பேசுவதும் இந்த முறை குறைந்திருந்தது.

Recommended Video

    Tamilnadu Assembly வரலாற்றிலேயே முதல்முறையாக கேள்வி-நேரம் நேரலை
     பட்ஜெட் கூட்டத்தொடர்

    பட்ஜெட் கூட்டத்தொடர்


    வரும் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பேரவை நிகழ்வுகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் நேரலையில் பேரவை நிகழ்ச்சிகளை காண்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+