கராத்தே தியாகராஜன் சொல்றதுக்கெல்லாம் கவலைப்படவில்லை.. ஆனால்.. விஜயதரணி எம்எல்ஏ விளக்கம்
சென்னை: கராத்தே தியாகராஜன் தன் மீது என்ன குற்றச்சாட்டு முன் வைத்தாலும் அதுபற்றி கவலையில்லை என்றும் உண்மை என்னவென்று ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டை முன்வைக்கட்டும் என்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.
என்னைப் போலவே நிறைய மாவட்ட செயலாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கன்னியமாக்குமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி டிவி விவாதத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதாக காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியிருந்தார். காராத்தே தியாகராஜனின் விமர்சனம் குறித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் விஜயதரணி செய்தியாளர்கள் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில், "கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் தற்காலிக நீக்கம் செய்துள்ள நிலையில் கட்சியினர் மீது பலேவேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதேபோல் நான் பிரதமர் மோடிக்கு ஆதாரவாக ஊடக விவாதங்களில் பேசியதாக என் மீதும் குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தொடர்ந்து 2 நாட்களாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும், அறிவுரை வழங்கியும் வந்தார். நான் அதற்கு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் மீது விமர்சனம் செய்து மக்கள் பிரச்சனை கைவிடக்கூடாது என்றுதான் கூறினேன். அந்த விவாதங்களை முழுமையாக பார்த்துவிட்டு பின்னர் குற்றம்சாட்டட்டும். மேலும் நான் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு என்னுடைய விளக்கத்தை அளித்துள்ளேன்.
நான் அடிமட்ட தொண்டனாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன். எந்த விதத்திலும் நமது கட்சியை பலவீனப்படுத்தக்கூடிய எந்த ஒரு கருத்தையும் பேசிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டுதான் ஊடக விவாதங்களில் பேசி வருகிறேன்.
கராத்தே தியாகராஜன் என்மீது என்ன குற்றச்சாட்டு முன் வைத்தாலும் நான் கவலைப்படவில்லை. உண்மை என்னவென்று ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டை முன்வைக்கட்டும்.
குற்றம்சட்டினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்று அவர் நினைத்தால் முழுமையாக உண்மையை தெரிந்து கொண்டு குற்றம்சாட்டடும்" இவ்வாறு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications