அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளர்! தங்களுக்கு ஒரு பி.ஏ.! சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த டிமாண்ட்
சென்னை: அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளரும், தங்களுக்கு ஒரு நேர்முக உதவியாளரும் வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனிடையே ஏற்கனவே ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முதலமைச்சரை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று காலை, மாலை என இரண்டு ஷெசன்களாக சட்டசபை நடைபெற்றது.
இரவு 9 மணி வரை நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகள் பற்றி பட்டியலிட்டுக் கொண்டு வந்தார் துரைமுருகன்.
சட்டசபை கூட்டத் தொடரை ஊட்டியில் நடத்த வேண்டும் என பாமக எம்.எல்.ஏ. அருள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதை பழைய நிகழ்வுகளுடன் சுட்டிக்காட்டி கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்ற வரலாற்றை கூறிய அவர், அந்தக் காலத்தில் ஏசி வசதி இல்லாததால் அப்படி நடந்ததாகவும் இப்போது ஊட்டியை விட அதிக குளிரில் ஏசி இயக்கப்பட்டு சபை நடந்து வருவதாக கூறினார்.

மேலும், அரசு ஊதியத்தில் தொகுதிக்கு ஒரு செயலாளரும், தங்களுக்கு ஒரு உதவியாளரும் வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும் இது சாதாரண விஷயம் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டலில் வைஃபை வசதி கேட்டதன் அடிப்படையில் அதற்கு ஒன்றே கால் கோடி நிதி ஒதுக்கப்பட்டு கையெழுத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications