மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை எதற்காக? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்கள் கண்காணிப்பகம்
தமிழகத்தின் பெரும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை நடைபெறும் மனித உரிமை மீறல்களை (சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் படுகொலை உட்பட ) உலகிற்கு அறிய வைத்து சட்டத்தின் உதவியுடன் நீதிப் பெற்றுத் தரும் அரிய தொண்டை ஆற்றி வரும் நிறுவனம் ஹென்றி டிபேன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம்.

கால் நூற்றாண்டு
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், மாற்று திறனாளிகள் உரிமைகள் என மனித உரிமைகளின் பல்வேறு தளங்களில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்படும் செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்களிப்பு மகத்தானது.

கண்டனம்
மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் நேற்றைய தினம் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த நோக்கத்திற்காக நேற்றைய தினம் சிபிஐ சோதனைகள் நடத்தியதோ அது குறித்து ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது தேவையற்ற நடவடிக்கை ஆகும்.

மனித உரிமை
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இச்சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தான் புரிந்து கொள்ள முடிகின்றது. இது போன்ற மிரட்டல் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளின் அடிப்படையில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications