''விசாரணை அமைப்புகளை வேட்டை நாய்களை போல் ஏவும் மத்திய அரசு''! செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ஜவாஹிருல்லா
சென்னை: அரசியல் எதிரிகள் மீது சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வேட்டை நாய்களை போல் மத்திய அரசு ஏவிவிடுவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது அராஜகம் எனக் கூறியிருக்கிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
''அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை வேட்டைநாய்களைப் போல ஏவி விடுவது ஒன்றிய பாஜக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது.

அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் ஒன்றிய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது.
அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது அமலாக்கத் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையும். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பாஜகவின் கனவு நனவாகாது.''












Click it and Unblock the Notifications