மொபைல் ஆப் சக்சஸ்.. தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பர் முடிவு.. இனி எல்லாமே ஈஸி
சென்னை: மின் இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மொபைல் ஆப் மூலம் மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்த போகிறதாம் மின்வாரியம் .
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் மின் வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல் மின் விநியோகத்தில் பிரச்சனை என்றாலும், கால் சென்டருக்கு போன் செய்து தான் நிவாரணம் பெற முடியும். அதேபோல் உங்கள் பகுதியில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட போகிறது என்றால் அதையும் செய்திகளில் பார்த்து தான் அறிய வேண்டும்.

உங்கள் வீட்டில், குறைபாடு உடைய மீட்டர் இருந்தால், அதற்கு பதில் புதிதாக மீட்டர் மாற்ற வேண்டும் என்றால் நேரில் தான் போய் விண்ணப்பிக்க வேண்டும். மின்வாரியத்தில் தற்போதைய நிலையில் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் மின்வாரியத்தின் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைனுக்கு மாற்ற தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கு செல்போன ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பை ஊழியர்கள் தங்களது போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள்,
இந்த ஆப் மூலம் மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இதனால், கட்டண விபரம் நுகர்வோருக்கு உடனே எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், செல்போன் ஆப்பில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட உள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த மின்வாரியம் திட்டமிட்டிருக்கிறது.
இந்த புதிய திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 12 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உற்சாகமான மின்வாரியம் மாநிலம் முழுவதும் அமல்படுத்த முடிவு செய்திருக்கிறதாம்.
மின்கட்டணம் செலுத்தாமல் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் செல்போனில் உள்ள ஆப்பில் அதிகாரிகளால் அறிய முடிகிறது. இதேபோல் மொபைல் ஆப்பில் புதிய மின்இணைப்புக்கு ஒதுக்கப்படும் மீட்டர் எண்களும் உடனே பதிவு செய்து ஒப்புதல் தர முடிகிறதாம்.
இதனால், அலுவலகத்துக்கு வந்து கணினியைப் பார்த்து ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் மொபைல் ஆப் மூலமே மின்இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறதாம்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications