அப்பதான் புதுசா வாங்கினது.. குபுகுபுன்னு பத்தி எரிஞ்சு கருகி போச்சு.. கவலையில் மணிகண்டன்!
மொபெட் பைக்கில் தீ பிடித்து எரிந்து கருகியதால் விசாரணை நடந்து வருகிறது
Recommended Video
சென்னை: அப்பதான் புதுசா பேட்டரி மொபெட் ஒன்றை வாங்கியிருந்தார் மணிகண்டன். அது என்னடான்னா.. சார்ஜர் போடும்போது வெடித்து சிதறி.. குபு குபுன்னு பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சிடுச்சு!
சென்னை மாங்காடு, அம்பாள் நகர், குபேரன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயசு 32. கனரக வண்டிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் மின்சாரத்தால் சார்ஜர் போட்டு இயக்கப்படும் பேட்டரி மொபெட் ஒன்றை வாங்கினார். அந்த மொபட்டுக்கு வீட்டின் முன்பகுதியில் வைத்து சார்ஜர் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த மொபெட் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
தீ விபத்து
இந்த சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து வெளியே பார்த்தனர். மொபெட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கருகியது
ஆனால் அளவுக்கு அதிகமாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அதனால் உடனடியாக தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அவர்களே போராடி தீயை அணைத்து விட்டாலும் பேட்டரி மொபெட் மொத்தமா தீயில் எரிந்து நாசமானது.
விசாரணை
இந்த தீ விபத்தில் வீட்டின் சுவர்களில் கரும்புகை படிந்துவிட்டது. பக்கத்தில் இருந்த எலக்ட்ரிக் வயர்கள், சுவிட்ச் பாக்ஸ் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேட்டரி மொபெட் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கவலை
இன்னைக்கு காலைல இருந்தே அந்த பகுதியில் லோ-வோல்ட்டேஜ் கரண்ட் இருந்ததாம். அதனால்தான் பிடித்ததா? அல்லது பேட்டரி மொபெட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்ற கோணங்களில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. ஆனாலும் வாங்கி கொஞ்ச நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படி கண்முன்னாடியே கருகி போயிடுச்சே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்பட்டனர்!