Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசமாக மாட்டிய 75 பெரிய தலைகள்.. இந்திய அரசியலையே உலுக்க போகும் ஹனி டிராப் சம்பவம்.. சிக்கிய பலர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 72 முதல் 75 மூத்த அதிகாரிகள் ஒரு பெரிய ஹனி டிராப் மோசடியில் சிக்கியதாக வெளியான செய்திகளையடுத்து அம்மாநில அரசியலே அதிர்ச்சியில் ஸ்டன் ஆகி உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

அம்மாநில அரசியலை இது பெரிய அளவில் உலுக்கி உள்ளது. பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இதனால் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. உதவி கேட்டு வரும் பெண்கள் போல நடித்து அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இவர்கள் நெருக்கம் ஆகி உள்ளனர். பின்னர் அவர்களிடம் கூடுதல் நெருக்கமாகி அப்படியே ஆபாச வீடியோ, புகைப்படங்களையும் எடுத்து உள்ளனர். பின்னர் அதை பயன்படுத்தி அரசியல்வாதிகளை மிரட்டி பல விஷயங்களை சாதித்துள்ளனர். இவர்களுக்கு பின் பெரிய குழுவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Maharashtra

பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பாஜக தலைகளும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது . அதேபோல் இவர்களுக்கு பின் சில அரசியல் புள்ளிகள் முக்கியமாக ஹனி டிராப் செய்வதில் பிரபலமான அரசியல் புள்ளிகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர் என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

எங்கே நடந்தது?

இந்த சம்பவங்கள் நாசிக்கில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளன. அதாவது அதிகாரிகளை, அரசியல்வாதிகளை இங்கே அழைத்து வந்துதான் நெருக்கமாக வீடியோ எடுத்தது ஹனி டிராப். செய்துள்ளனர் இது தொடர்பாக மும்பை நாக்கா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். முதல்வர் ஏன் மௌனமாக இருக்கிறார்? மாநில புலனாய்வுத் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது உண்மையென்றால், அது மிகப்பெரிய அவமானம். என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

இந்திய அரசியலில் இது மிகப்பெரிய ஹனி டிராப் வீடியோக்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் நானா படோலே, இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரினார். ஹனி டிராப் சம்பவம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வந்துள்ளன. இது ஒரு பெரிய மற்றும் முக்கியமான பிரச்சினை. இதன் காரணமாக ரகசிய ஆவணங்கள் தேச விரோதிகளின் கைகளுக்குச் சென்றால், அது பெரிய தவறாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

அதிர்ச்சி தரும் சம்பவம்

பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹனி டிராப் குறித்த ஊடக செய்திகள் வந்த பிறகும், அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர்? புலனாய்வு அமைப்புகள் ஏன் ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறிவிட்டன? இனி இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் அங்கே எழுப்பி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+