வசமாக மாட்டிய 75 பெரிய தலைகள்.. இந்திய அரசியலையே உலுக்க போகும் ஹனி டிராப் சம்பவம்.. சிக்கிய பலர்
சென்னை: மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 72 முதல் 75 மூத்த அதிகாரிகள் ஒரு பெரிய ஹனி டிராப் மோசடியில் சிக்கியதாக வெளியான செய்திகளையடுத்து அம்மாநில அரசியலே அதிர்ச்சியில் ஸ்டன் ஆகி உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
அம்மாநில அரசியலை இது பெரிய அளவில் உலுக்கி உள்ளது. பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இதனால் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. உதவி கேட்டு வரும் பெண்கள் போல நடித்து அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இவர்கள் நெருக்கம் ஆகி உள்ளனர். பின்னர் அவர்களிடம் கூடுதல் நெருக்கமாகி அப்படியே ஆபாச வீடியோ, புகைப்படங்களையும் எடுத்து உள்ளனர். பின்னர் அதை பயன்படுத்தி அரசியல்வாதிகளை மிரட்டி பல விஷயங்களை சாதித்துள்ளனர். இவர்களுக்கு பின் பெரிய குழுவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பாஜக தலைகளும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது . அதேபோல் இவர்களுக்கு பின் சில அரசியல் புள்ளிகள் முக்கியமாக ஹனி டிராப் செய்வதில் பிரபலமான அரசியல் புள்ளிகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர் என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
எங்கே நடந்தது?
இந்த சம்பவங்கள் நாசிக்கில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளன. அதாவது அதிகாரிகளை, அரசியல்வாதிகளை இங்கே அழைத்து வந்துதான் நெருக்கமாக வீடியோ எடுத்தது ஹனி டிராப். செய்துள்ளனர் இது தொடர்பாக மும்பை நாக்கா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். முதல்வர் ஏன் மௌனமாக இருக்கிறார்? மாநில புலனாய்வுத் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது உண்மையென்றால், அது மிகப்பெரிய அவமானம். என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன.
இந்திய அரசியலில் இது மிகப்பெரிய ஹனி டிராப் வீடியோக்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் நானா படோலே, இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரினார். ஹனி டிராப் சம்பவம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வந்துள்ளன. இது ஒரு பெரிய மற்றும் முக்கியமான பிரச்சினை. இதன் காரணமாக ரகசிய ஆவணங்கள் தேச விரோதிகளின் கைகளுக்குச் சென்றால், அது பெரிய தவறாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
அதிர்ச்சி தரும் சம்பவம்
பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹனி டிராப் குறித்த ஊடக செய்திகள் வந்த பிறகும், அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர்? புலனாய்வு அமைப்புகள் ஏன் ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறிவிட்டன? இனி இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் அங்கே எழுப்பி உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications