Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் தீப்பிடித்து தாயும் மகளும் உடல் கருகி பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் தீப்பிடித்து தாய், மகள் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.

அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ஹாலினா (50). இவருடைய மகள் நஸ்ரியா (16). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஏசி போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

Mother and daughter died of fire broke in AC machine in Chennai Ambattur

அப்போது அவர்களுடைய வீட்டிலிருந்து புகை வந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது படுக்கை அறையில் ஹாலினாவும் நஸ்ரியாவும் தீயில் கருகி இறந்து கிடந்தனர்.

Mother and daughter died of fire broke in AC machine in Chennai Ambattur

இதையடுத்து இருவரது உடலையும் போலீஸார் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் புகை காரணமாக மூச்சுத்திணறலால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+