“அம்மாவுக்கு உரிமை”.. இறந்த மகளின் ரூ6 லட்சம் ஜீவனாம்ச பாக்கியை கேட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: மகள் இறந்துவிட்ட நிலையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச பாக்கியை பெறுவதற்கு தாய்க்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு சரஸ்வதி என்பவருடன் கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டு செய்யூர் நீதிமன்றம் கடந்த 2005 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தில் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் விவாகரத்து செய்த கணவர் அண்ணாதுரையிடம் ஜீவனாம்சம் கேட்டு மதுராந்தம் நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுராந்தம் நீதிமன்றம் சரஸ்வதிக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டில் உத்தரவு அளித்தது.
நீதிமன்றம் தீர்ப்பின்படி ஜீவனாம்ச பாக்கி தொகையான ரூ.6.22 லட்சத்தை தனக்கு வழங்க உத்தரவிடுமாறும் சரஸ்வதி புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்த நிலையிலேயே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரஸ்வதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் தாயார் ஜெயா, ஜீவனாம்ச பாக்கியை தனக்கு வழங்க வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்த வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற மதுராந்தகம் நீதிமன்றம் அவரை வழக்கில் இணைத்தது. இதனை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்து வாரிசு உரிமை சட்டம் 15 இன் கீழ், மனைவி இறந்துவிட்டால் குழந்தைகளுக்கும் அதன் பிறகு கணவருக்கும், அவரது அடுத்ததாக பெற்றோருக்கும் சொத்துக்கள் வரும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் அண்ணாதுரை - சரஸ்வதி ஆகியோருக்கு விவாகரத்தாகி, தற்போது சரஸ்வதியும் இருந்துவிட்டதால் அவரது வழங்கப்பட வேண்டிய ஜீவனாம்ச தொகை பாக்கியை தாயார் ஜெயா பெறுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி, மதுராந்தகம் நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயாவை இணைத்து உத்தரவிட்டதை உறுதி செய்து, அண்ணாதுரையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications