100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறீர்களா.. மக்களவையில் கொந்தளித்த விசிக எம்பி ரவிக்குமார்
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறார்களா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருப்பதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2021 - 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-23 பட்ஜெட்டில் அது 73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.

60 ஆயிரம் கோடி
இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதியை 60 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்கள் தான் வேலை கிடைக்கிறது. இப்போது மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் இதில் 10 நாட்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

வறுமை ஒழிப்பு
கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது. கிராமப்புற ஏழைகளின் வயிற்றிலடிக்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு கட்டாயம் 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை மாநில அரசு வழங்குிறது.

ரூ 674 கோடி
இந்த திட்டத்திற்காக ரூ 674 கேோடியை மத்திய அரசு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்கான 25 சதவீதம் அதாவது ரூ 224 கோடியை தமிழக அரசு கடந்த ஆண்டு விடுவித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி ஆண், பெண் இருபாலருக்கும் தினசரி ரூ 281 ஆக ஊதியம் உயர்த்தப்பட்து.
-
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications