Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காயத்ரி! நீங்களே சொல்லுங்க! உள்ளே தூக்கி வச்சிட்டா போச்சு! உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்? திமுக எம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்து யாரை தூக்கி வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்கள் என சவுதாமணி கைதுக்கு பொங்கிய காயத்ரி ரகுராமுக்கு திமுக எம்பி செந்தில் குமார் பதிலடி கொடுத்தார்.

மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சவுதாமணி ட்வீட் வெளியிட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரணை நடத்தினார்.

சவுதாமணி

சவுதாமணி

அப்போது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

முன்ஜாமீன் மனு

முன்ஜாமீன் மனு

இதையடுத்து மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சவுதாமணி கைது

சவுதாமணி கைது

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இது போன்ற தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சவுதாமணி சைபர் கிரைம் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பொங்கிய காயத்ரி

இந்த கைதுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில சவுதாமணி கைது திமுக அரசின் பழிவாங்கும் செயல். இதை நான் கண்டிக்கிறேன். திமுகவின் இலக்கு எளிதானவர்களை நோக்கியே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

செந்தில் குமார் பதிலடி

இதற்கு திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சரி நீங்களே உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கஷ்டமான இலக்கை சொல்லுங்க, உங்க ஆசைக்கு உள்ளே தூக்கி வச்சிட்டா போச்சு என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+