கர்நாடகா சட்ட சபை தேர்தலில் பிரபலமான மைசூர்பாக்கு
சென்னை: கர்நாடகா சட்ட சபை தேர்தல் 2023 மே 10 ஆம் தேதி புதன்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் அன்று அதிக பட்ச வாக்குகளை செலுத்துவதற்காக, பெங்களூரில் ந்ருபதுங்கா சாலையில் உள்ள பிரபல நிசர்கா கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்கள், வாக்காளர்களுக்கு இலவச உணவு, மைசூர்பாக், வெண்ணெய் தோசை, ஜூஸ், மற்றும் 100 திரைப்பட டிக்கெட் வழங்கப்படும் என்று பலரை கவரும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
தேர்தல் நாளில், வாக்களித்த பின்பு, விரலில் வைக்கப்பட்ட மை அழியாமல் காட்டுபவர்களுக்கு, இந்த ஹோட்டலில் உணவுகளில் இலவசங்கள் வழங்கப்படும் என்றும், முதன்முறை வாக்களிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் வெற்றி
நடந்து முடிந்த தேர்தலில், நீண்ட காலத்திற்கு பிறகு, காங்கிரஸ் வெற்றிபெற்று, விரைவில் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அநேக வாக்குறுதிகளையும், இலவசங்களை, தேர்தல் வாக்குறுதியாக அளித்தனர். காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைத்த பின்பு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகளை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.













Click it and Unblock the Notifications